FAQ

ඔබගේ දියනියගේ මේ වෙනස ඔබ හදුනාගැනීම ඉතාමත් වටිනවා. ඇය කියාගැනීමට අපහසු සිතේ තෙරපෙන අවුලකින් සිටිනවා වන්නට පුලුවනි.ඔබ ඇයට ඉතාමත් සමීප නම් ඇයගේ හැගීම් විමසා සිතේ තෙරපෙන දේවලට සවන් දෙන්න උත්සාහ කරන්න. ඔබ හා විවුර්ත වීමට අකමැති නම් අපගේ සුමිත්‍රයෝ ශාකාවකට සම්බන්ධ කිරීම සුදුසු යයි හැගෙනවා.අපගේ ප්‍රධාන කාර්‍යාලයේ දුරකතන අන්කය මෙසේයි.0112682535 හෝ 0112682570.ඔබට ලගම ශාකාව පිලිබදව විස්තර අසා දැනගන්න. අපගේ අන්තර් ජාලය හරහාද අප හා එක්විය හැකිය. එසේත් නැතහොත් 1926 දුරකථනයට කතා කරන්න කියන්න. අන්කය ලබාදුන්නේ ශ්‍රිලන්කා සුමිත්‍රයෝ සන්විදානයෙන් බව පවසන්න

වයස කීය වුනත් මානසිකව සහ කායිකව නීරෝගී නම් වයස් බේදයකින් තොරව ලින්ගික හැගීම් ඇතිවීම ඉතාමත් සාමාන්‍ය තත්ත්වයකි. එයට ගැහැණු පිරිමි බේදයක් නොමැත. පුරාණයේ ශ්‍රී ලන්කාවේ විවාහයන් සිදුවී ඇත්තේ බෙහෙවින්ම පුරුෂයාට වඩා ලාබාල කාන්තාවන් සමගයි. නමුත් අද සමාජය ඊට වඩා වෙනස්. පුරාණයේ කාන්තාවන් විශ්ව විද්‍යාලයවට යෑම හෝ නිවසින් බැහරව රැකියා සදහා ගියෙත් නැහැ. කාන්තාවන්ට පවුල තුල ආරක්ශාව සහ ගෞරවය තිබුණා.වර්තමාන සමජයේ වයස් භේදයකින් තොරව සුවාදීනව නිදහසේ හැසිරෙන නිසා මෙසේ හැසිරීමේ විශේශත්වයක් පෙනුනත් මෙය අසාමාන්‍ය තත්ත්වයක් නොවේ.

ළමාවිය පසුකරමින් යොවුන් වියට පා තබණ මෙම දරුවන් ශාරීරිකව සහ මානසිකව බොහෝ වෙනස්කම් වලට භාජනය වන අවදියකි. මෙම වෙනස්කම් සමගින් සිතුම් පැතුම්වලද විශාල වෙන්සක් ඇතිවීම ඉතාමත් සුවභාවික තත්ත්වයක් වන අතර ළමාවිය තුලදී මෙන් දෙමාපියන් ඇසුරේම සිටීමට වඩා සමවයසේ හිතමිතුරන් ඇසුරු කිරීමටත් සුවාදීනව කටයුතු කිරීමට මෙන්ම අභියෝග වලට මුහුණ දීමටත් නිතරම තමන් කියනා කරණා දේවල් නිවැරදි යයි සිතණා අවදියක් වීමත් නිසා දෙමපියන් සහ වැඩිහිටියන් සමග ගැටුම් ඇතිකර ගැනීම නිසා නිතරම සැමදේටම තරහ යාමත් නොසන්සුන් තත්ත්වයක් දක්නට ලැබිමත් ජානමය ප්‍රශ්නයක් නොව මේ අවදියේදී සුවභාවික තත්ත්වයකි.

මෙයට හේතු කාරණා රාශියක් තිබේ. ඉන් ප්‍රධාන වශයෙන් අපගේ සමාජ ආර්ථික වෙනස්කම් නිසා ඇතිවි ඇති විවිද තත්වයන්ට මුහුණ පෑමේදී ඇතිවන ගැටලු වලට නිසි ලෙස දරාගැනීමට කුසලතා වර්තමාන සමාජයේ අඩුවීම. දුකක් කරදරයක් ඇතිවූ විට එය බෙදා ගැනීමට විශ්වාස වන්තයන් නොමැති කමත් එවන් අයට සවන් දීමට හෝ සහාය වීමට වර්තමාන සමාජය තුල එතරම් තැකීමක් නොමැති කමත් තවත් හේතුවක් වේ. එමෙන්ම සිතේ ඇතිවන වේදනාව නිසා ඇතිවන මානසික වියාකූලතවය සහ අවපීඩන නිසිලෙස හදුනාගැනීමට පවුලේ සමීපතමයින්ට නොහැකි වීමත් එවන් අවස්ථා වලදී නිසි මගපෙන්වීමක් හෝ ප්‍රතිකර්මයක් නොලැබීමත් . එමෙන්ම සමාජයේ සියදිවි හානිය පිලිබදව ඇති මිත්තියා විශ්වාස මෙන්ම විවුර්තව කතා කිරීමට ඇති අක්මැත්ත. පුවත්පත් හා රූපවාහිනී මගින් කරණා ප්‍රචාරයන් සහ ඒවා සදහා දෙන අන්වශ්ශ වටිනාකම් නිසා ඒවා අනුකරණය කිරීමත් හේතුවක්ව තිබේ. කෙසේ වෙතත් සියදිවි හානිය වැලැක්වීම සදහා සහායවීම සෑම පුරවැසියෙකුගේම වගකීම සහ යුතුකමවන්නේය.

Absence of friendly interaction between family members and, each one being totally absorbed in their own interests (smart phone, computer, social media, internet etc) and, which does not include any of his/her family members, could lead to isolation in the family circle and estrangement from each other. Where does one turn to in a crisis? The resulting intense loneliness could lead to thoughts of suicide, of life not being worthwhile living.
Parents should strive to show love and care for their children from birth and instill in them the wonderful quality of caring for each other. Parents should set the example of loving care and discipline. Money and high tech equipment cannot replace love care and attention. The question of drugs and body building and its effect on fertility is best answered by a qualified doctor.

A person at risk of suicide needs to have carers, family and/or friends who show care and concern. Avoid isolation of the person. The family members should be made aware of the risk of suicide and the need for psychiatric care for the person at risk. A caring individual, family member or friend could do this, it will save a life. There are no visible disadvantages. Any one of us could be at the risk of suicide at some point in our life, an understanding caring person could save us.

Get the young man to talk about himself, his interests, his life at college, his friends, his likes and dislikes. Listen and be totally non-judgemental. Encourage him to talk about the present and his hopes for the future. Just listen, listen and listen and show appreciation, no criticism but appreciation of the interaction with him. Give him space, respect his silences and do not assume how he feels and avoid advice.

When suicides are reported in the print and electronic media, it is in the best interests of the public to keep it factual, not dramatise nor give the reporters version of the reasons for the suicide. Not describe the methods used but give names and contact details of suicide prevention agencies such as Sri Lanka Sumithrayo and all its branches island-wide. In many instances had they been contacted the end result may have been different.

Parents or other adult carers of children should monitor the use of smart phones, computers, social media etc of young children whose minds are not mature enough to positively process the pornography and other negative distractions they may be exposed to on their smart phones and on the internet. Children should have proper sex education, given by parents and teachers and made aware of sexual abuse and how and to whom they should turn to for help. Parent child relationship should be such that no child should be frightened of not being believed or being ostracized. Children should be made aware of personal/physical boundaries to protect themselves. All children should be educated on different sexual orientations and be encouraged to accept and be empathetic towards people who may be different to them.

உங்கள் மகளின் இந்த மாற்றத்தை நீங்கள் அடையாளம் கண்டது மிகவும் முக்கியம். அவர் வெளியில் கூற முடியாத ஏதாவது மன அழுத்தத்தில் இருக்கலாம். நீங்கள் அவருடன் மிகவும் நெருக்கமாக இருந்தால், அவருடைய உணர்வுகளைக் கேட்க முயற்சி செய்யுங்கள், அவருக்குச் செவிசாய்க்க முயற்சி செய்யுங்கள். உங்களுடன் மனம் திறந்து கதைக்க விரும்பவில்லை என்றால், எங்கள் “சுமித்ரயோ” அலுவலகத்துடன் தொடர்பு கொள்வது நல்லது. எங்கள் தலைமை அலுவலகத்தின் தொலைபேசி எண்: 0112682535 அல்லது 0112682570. தயவுசெய்து உங்களுக்கு அருகிலுள்ள கிளைகள் குறித்து விசாரித்து அக் கிளையுடன் தொடர்பு கொள்ளவும். எங்கள் இணையம் வழியாகவும் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்: அல்லது 1926 இலக்கத்தை அழைக்கச் சொல்லுங்கள். இலங்கை சுமித்ரயோ அமைப்பு இவ்விலக்கத்தை கொடுத்தது என்று சொல்லுங்கள்

நீங்கள் வயதானவராக இருந்தாலும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தால், வயது வித்தியாசமின்றி பாலியல் உணர்வைக் கொண்டிருப்பது மிகவும் பொதுவானது. இதற்கு ஆண், பெண் வேறுபாடுகள் எதுவும் இல்லை. பண்டைய இலங்கையில், ஆண்கள் மிகவும் வயது குறைந்த பெண்களையே திருமணம் செய்தனர். ஆனால் இன்று சமூகம் வேறு. பண்டைய காலங்களில் பெண்கள் பல்கலைக்கழகத்திற்குச் செல்லவோ, வீட்டை விட்டு வெளியில் வேலைக்கு செல்லவோ இல்லை. குடும்பத்திற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்ணியம் இருக்கிறது. இன்றைய சமூகத்தில் வயதைப் பொருட்படுத்தாமல் எவரும் சுதந்திரமாக செயற்படுவதால் இவ்வாறான நடத்தை புதிரானதாக இருந்தாலும் அசாதாரணமான செயல் அல்ல.

குழந்தை பருவத்தை கடந்து இளமைப் பருவத்தினை அடையும் சிறார்கள் பல உடல் மற்றும் மன மாற்றங்களுக்கு உட்படுகிறார்கள். இந்த மாற்றங்கள் சிந்தனையில் பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என்பது மிகவும் இயல்பானது. இப் பருவத்தில் பெற்றோருடன் பழகுவதை விட தம் வயதுடைய நண்பர்களுடன் பழக விரும்புவதும், சுதந்திரமாக செயல்பட விரும்புவதும், புதிய சவால்களுக்கு முகம் கொடுப்பதும் தாம் சொல்வதே சரியானது என்று நினைப்பதும் போன்ற காரணங்களால் பெரியவர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. கோபப்படுவது இப்பருவத்தினரின் சுபாவம். இது ஒரு மரபணு பிரச்சினை அல்ல.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. நமது சமூக-பொருளாதார மாற்றங்களால் எழும் பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்படும் சிரமங்களைச் சமாளிக்க இன்றைய சமூகத்தில் திறன்கள் இல்லாததே பிரதான காரணம். துன்பத்தை எதிர்கொள்ளும் போது அதைப் பகிர்ந்து கொள்வதற்கு நம்பிக்கையானவர்கள் இல்லாததும் இன்றைய சமூகத்தில் அத்தகையோரின் துயரினை செவிமடுப்பதற்கோ ஆதரிப்பதற்கோ மற்றவர்கள் அக்கறை காட்டாததும் இன்னொரு காரணியாகும். மேலும் ஒருவரது மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வை குடும்ப உறுப்பினர்களால் சரியாக கண்டறிய முடியாத சந்தர்ப்பங்களில் உரிய வழிகாட்டுதல் அல்லது பரிகாரம் இல்லாததும் ஒரு காரணமாகும். மேலும், சமூகத்தில் தற்கொலை பற்றியுள்ள மூடநம்பிக்கை அது பற்றி வெளிப்படையாக கதைப்பதற்குள்ள தயக்கம் மற்றும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் தற்கொலை சம்பந்தமாக செய்யப்படும் பிரச்சாரம் மற்றும் அதற்கு வழங்கப்படும் தேவையற்ற மதிப்புகளும் காரணமாக அமைகின்றன. இருப்பினும், தற்கொலையைத் தடுக்க உதவுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

குடும்ப உறுப்பினர்களுக்கிடையில் நட்புரீதியான தொடர்பு இல்லாதது மற்றும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த விருப்புகளில் (ஸ்மார்ட் போன், கணினி, சமூக ஊடகங்கள், இணையம் போன்றவை) அவரது குடும்ப உறுப்பினர்கள் எவரையும் சேர்க்காது தனித்து முழுமையாக உள்வாங்கப்படுவதானது அவர்களை தனிமைப்படுத்த வழிவகுக்கும். இவ்வாறு குடும்ப வட்டத்திலிருந்து பிரிந்த/தனித்த ஒருவர் ஒரு நெருக்கடியில் எங்கே திரும்புவார்? இதன் விளைவாக ஏற்படும் தீவிரமான தனிமை வாழ்க்கை பயனற்றது என்ற உணர்வுக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் வழிவகுக்கும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது பிறப்பிலிருந்தே அன்பையும் அக்கறையையும் காட்ட முயற்சிக்க வேண்டும். மற்றவர்களை கவனித்துக் கொள்கின்ற அற்புதமான குணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். அன்பான கவனிப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு பெற்றோர் முன்மாதிரியாக விளங்க வேண்டும். பணம் மற்றும் உயர் தொழில்நுட்ப உபகரணங்களால் அன்பு, கவனிப்பு மற்றும் பாசத்தை ஈடு செய்ய முடியாது.
ஆ) மருந்துகள் மற்றும் உடல் கட்டமைப்பின் கேள்வி மற்றும் கருவுறுதலில் அதன் தாக்கம் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரால் சிறந்த முறையில் பதிலளிக்கப்படலாம்.

தற்கொலை ஆபத்தில் இருக்கும் ஒரு நபருக்கு கவனிப்பாளர்கள், குடும்பத்தினர் மற்றும் அக்கறை காட்டும் நண்பர்கள் இருக்க வேண்டும். அத்தகைய நபர் தனிமைப் படுத்தப்படுவதைத் தவிர்க்கவும். தற்கொலைக்கான ஆபத்தில் இருக்கும் நபருக்கு மனநல பராமரிப்பு தேவை என்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அக்கறையுள்ள ஒரு நபர், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவரால் இதைச் செய்ய முடியும். அது ஒரு உயிரைக் காப்பாற்றும். இதில் குறைபாடுகள் எதுவும் இல்லை. நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் நம்மில் யாராவது தற்கொலைக்கான ஆபத்தில் இருக்கக்கூடும், புரிந்துகொள்ளும் அக்கறையுள்ள யாராவது ஒருவர் அந்நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்ற முடியும்.

இளைஞனைப் பற்றி, அவரது ஆர்வங்கள், கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள், அவருடைய விருப்பு வெறுப்புகள் பற்றிப் பேசுங்கள். நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான அவரது நம்பிக்கைகள் பற்றி பேச அவரை ஊக்குவியுங்கள். அவருக்கு செவி மடுத்து அவரது கருத்துக்களை பாராட்டுங்கள், பாராட்டுவதை தவிர அவரை விமர்சிக்காதீர்கள்: அவருக்கு தேவையான இடைவெளியை கொடுப்பதுடன் அவரது அமைதியை மதிக்கவும்: தேவையற்ற ஆலோசனையைத் தவிர்க்கவும். அவரது உணர்வுகளை பற்றி தீர்மானிக்க முற்பட வேண்டாம்.

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் தற்கொலை தொடர்பான செய்திகள் பொதுமக்களின் நலன்களுக்காக உண்மையாக வெளியிடப்பட வேண்டுமே அன்றி அதனை நாடகமாக்குவதோ அல்லது தற்கொலைக்கான காரணங்களை நிருபர்களின் கண்ணோட்டத்தில் வெளியிடுவதோ கூடாது. தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முறைகளை விவரிக்காமல் இலங்கை சுமித்ரயோ போன்ற இலங்கை முழுவதும் காணப்படும் தற்கொலை தடுப்பு அமைப்புகளின் மற்றும் அதன் கிளைகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களை கொடுங்கள். பல சந்தர்ப்பங்களில் தற்கொலையாளிகள் இவ் அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தால் இறுதி முடிவு வேறுபட்டிருக்கலாம்.

பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் ஸ்மார்ட் போன்கள், கணினிகள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் குழந்தைகளின் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். முதிர்ச்சியடையாத பருவத்திலிருக்கும் சிறார்கள் ஸ்மார்ட் போன்களின் மூலம் ஆபாசப் படங்கள் மற்றும் பிற விடயங்களை பார்க்கும் போது எதிர்மறை கவனச்சிதறல்களிற்கு உள்ளாகலாம். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு முறையான பாலியல் கல்வி மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் பற்றியும் பாலியல் துஷ்பிரயோக முயற்சிகளின் போது அவர்கள் எப்படி செயற்படவேண்டும், யாருடைய உதவியை பெற வேண்டும் என்பதை பற்றியும் அறிவுறுத்தப்பட வேண்டும். பெற்றோர் குழந்தை உறவானது, பெற்றோர் தான் சொல்வதை நம்ப மாட்டார்கள் அல்லது தான் ஒதுக்கி வைக்கப் படலாம் என்ற பயஉணர்வு குழந்தைகளுக்கு இல்லாதிருக்கின்றதாக இருக்க வேண்டும். குழந்தைகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனிப்பட்ட / உடல் எல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். எல்லா குழந்தைகளுக்கும் வெவ்வேறு பாலியல் நோக்குநிலைகளைப் பற்றி கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.